Thursday, June 29, 2017

சிக்கன் சால்னா - Chicken Salna



சிக்கன் சால்னா

அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் ஸ்பெஷல் சாப்பாடு வகைகள் போடனும் என்று ஆனால் இங்கு துபாயில் சரியான வெயில் நோன்பு நேரத்தில் பிஸியாகிவிட்டது போஸ்ட் பண்ண முடியவில்லை

அனைவருக்கும் ஈத் வாழ்த்துக்கள் & அட்வான்ஸ் ஆறு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ஆறு நோன்பு என்பது 30 நாள் ரமலான் நோன்பு முடிந்து அடுத்து வரும் ஆறு நோன்பு, இதை முடிந்தவர்கள் வைக்கலாம்.

ஈத் க்கு எப்போதும் கறி சேமியாதான் போடுவது வழக்கம், இப்ப பிள்ளைகளுக்காக சிக்கன் சால்னா பூரி, ஷீர் குருமா.


( மெயிலில் சிலர் சிக்கன் சால்னா கேட்டு இருந்தனர் அவர்களுக்காக )



சிக்கன் குருமா/ சால்னா - 1

  • சிக்கன்1 கிலோ
  • வெங்காயம் - 500 கிராம்
  • தக்காளி - 400 கிராம்
  • தயிர் - கால் கப்
  • மிளகாய் தூள் - ஒன்னறை மேசைகரண்டி
  • தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைகரண்டி
  • கொத்தமல்லி, புதினாஒரு கைபிடி
  • பச்சை மிளகாய் - 6
  • பட்டை, லவங்கம், ஏலம் - தலா ஒன்று
  • எண்ணை (அ) நல்லெண்ணைஅரை கப்
  • நெய்  - முன்று தேக்கரண்டி
  • தேங்காய் பால்இரண்டு டம்ளர் திக் பால் (அ) ஒரு முடி அரைத்து ஊற்றவும்.
  • முந்திரி 50 கிராம்
  • கசகசா - சிறிது
  • லெமன் சாறு – இரண்டு தேக்கரண்டி

  • கோழியில் வினிகர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை கிளறவும்.
  • கிளறி கொத்தமல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் போட்டு தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
  • தக்காளி வெந்ததும் சிக்கனை சேர்த்து கிளறி தயிரும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியில் சிறிது
  • கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சாதம், நெய் சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவைக்கு தொட்டு சாப்பிடலாம். விஷேசங்களுக்கு செய்வதாக இருந்தால் முந்திரி, கசகசா அரைத்து ஊற்றவும். தேவைப்பட்டால் உருளைக்கிழங்கும் சேர்க்கலாம். நல்லா இருக்கும். கோழியை தக்காளி வெந்ததும் கடைசியில் போடனும். ஏனென்றால் கோழி சீக்கிரம் வெந்து விடும்





சிக்கன் சால்னா - 2
இது நார்மலாக செய்யும் அளவு முறை  இதையே இன்னும் கொஞ்சம் ஈசியாக 

  • கோழியில் வினிகர்எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.தண்ணீர் வடிந்ததும் கோழியில்   பாதி இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் தயிர், தக்காளி பிழிந்து விட்டு 3 பச்சமிளகாய், உப்பு, கொத்துமல்லி தழை,சிறிது வெங்காயம் போட்டு நன்கு பிரட்டி மெரினேட் செய்யவும். 











  •  
    வாயகன்ற சட்டியை காயவைத்து நல்லெண்ணை + நெய்யை சேர்த்து காய வைத்து அதில் பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும், வதக்கி பொன்னிறம் ஆனதும் மீதி உள்ள இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சவாடை போனதும் அதில் கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.இப்போது மேரினேட் செய்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் கொதிக்க விட்டு சிறிது வெந்ததும் தேவைப்பட்டால் ஒரு உருளை கிழங்கை நாலாக வெட்டி போட்டு தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வேகவைத்து இரக்கவும்.

    ரொம்ப்  ஈசியான சிக்கன் சால்னா. சிம்பிள் மசாலா வகைகளை கொண்டு ஈசியாக தயாரிக்கலாம்.
     Eid Special, Friday Special Recipe, Sunday Special Recipe , Easy chicken salan/ kurma. Tradtional Muslim Home Salna 



  •  ரொட்டி பூரி சப்பாத்தி , ப்லைன் ரைஸ், கீ ரைஸ், பகாரா கானா, தோசை , ஆப்பம் , இட்லி அனைத்துக்கும் பொருந்தும் இந்த சால்னா.


இதில் இரண்டு முறை போட்டுள்ளேன் . ஒன்று பிரியாணி போல சட்டியில் அல்லது குக்கரில் தாளித்து அப்படியே செய்வது/
மற்றொன்று மேரினேட் செய்து சிம்பிளாக ஈசியாக செய்வது

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, June 23, 2017

ஏழு கறி சைவ நோன்பு கஞ்சி 7 Veggie Ramadan Soup


கஞ்சி இல்லாத நோன்பா! அதுவும் நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களிலும் பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சிக்கும் முஸ்லீம்கள் என்றில்லை முஸ்லீம் அல்லாதவர்களும் இதற்கு அடிமை. அப்படியே பெரிய சட்டியில் (தேக்‌ஷாவில்) 500 ,  1000 பேருக்கு தயாரிக்கும் போது அதன் ருசியே தனி. ஆனால் சைவம் சாப்பிடுபவரகளுக்கு இதை பற்றி அறிந்திருந்தாலும் அந்த கஞ்சி எப்படி செய்வார்கள் என்ன ருசியில் இருக்கும் அதை சாப்பிட்டு பார்க்கனும் என்ற ஆர்வம் கண்டிப்பாக இருக்கும், இதோ சைவ விரும்பிகளுக்காக மட்டன் சிக்கன் சேர்த்து செய்யும் அதே ருசியில் அதற்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து செய்துள்ளேன். 

சைவ நோன்பு கஞ்சி ( வெஜிடேபுள் நோன்பு கஞ்சி)
 ஏழு கறி சைவ நோன்பு கஞ்சி

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

தேவையான பொருகள்
பச்சரிசி – 100 கிராம்
பாசி பருப்பு – 25 கிராம்
கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பர்கல் அரிசி(உடைத்த சம்பா கோதுமை ரவை) – 1 மேசைகரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி



காய்கறிகள் (7 Veggie)

  1. சோயா  - 6
  2. பலாக்காய் – 25 கிராம்
  3. கேரட் – 25 கிராம்
  4. காலிப்ளவர் – 5 சிறிய பூ
  5. பீன்ஸ் – 25 கிராம்
  6. முட்டை கோஸ் – துருவியது – 2 மேசைகரண்டி
  7. கேப்சிகம் – சிறிது


வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
பச்சமிளகாய் – 3
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
எண்ணை – 6 தேக்கரண்டி





செய்முறை

அரிசி பருப்பு வகைகளை களைந்து ஊறவைக்கவும்
சோயாவை கழுவி ஊறவைத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
மற்ற காய் வகைகளை கட் செய்து தயாராக வைக்கவும்.

குக்கரில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கழுவி வைத்துள்ள அரிசி,பருப்பு,பர்கல், வெந்தயம் போன்றவைகளை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு வேகவிடவும்.

ஒரு பேனில் எண்ணையை சூடாக்கி பட்டை கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி , பச்சமிளகாய், கொத்து மல்லி புதினா சேர்த்து வேக விடவும்.
சோயா , பலாக்காயை பொடியாக அரிந்து  சேர்த்து வதக்கி வேக விடவும்.
மேலும் மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும். வெந்து   கொண்டு இருக்கும் அரிசியுடன் சேர்க்கவும்.
தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேகவிட்டு இரக்கவும். சுவையான சைவ நோன்பு கஞ்சி ரெடி.
இதற்கு தொட்டு கொள்ள மசால் வடை, சமோசா, கட்லட், புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


Seven Veggie Ramadan soup,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, June 20, 2017

பீட்ரூட் கேசரி கேக் - Beet Kesari Cake


கேசரி மிக சுலபமாக செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை அதில் பழ சாறோ அல்லது காய்கறிகளோ சேர்த்து இன்னும் சுவையூட்டி செய்யலாம்.


பீட்ரூட்  கேசரி
  • ரவை – 200 கிராம்
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஸ்வீட்டன்ட் கன்டெனஸ்ட் மில்க் – 3 மேசைகரண்டி
  • நெய் – 3 மேசை கரண்டி
  • முந்திரி பாதாம் 100கிராம்
  • பீட்ரூட் துருவியது – ஒன்று
  • நெய் – 3 மேசைகரண்டி
  • பட்டர் – 1 மேசைகரண்டி
  • வெண்ணீர் – 400 மில்லி
  • உப்பு – ½ சிட்டிக்கை
  • பிஸ்தா – சிறிது அலங்கரிக்க

செய்முறை

  1. நெய் சிறிது ஊற்றி முந்திரி பாதாம் பொடியாக அரிந்து வறுத்து தனியாக வைக்கவும்.
  2. அதே சட்டியில் சிறிது பட்டர் சேர்த்து துருவிய பீட்ரூட்டை வதக்கி ரவை சேர்த்து அதையும் வறுக்கவும். அதற்குள் கொதி வெண்ணீரை ரெடியாக வைக்கவும்.
  3. வறுத்து கொண்டுள்ள ரவையில் சிறிது சிறிதாக வெண்ணீரை ஊற்றி கிளறவும்.கண்டெஸ்ட் மில்க், (மில்க் மெயிட்) சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. கடைசியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கிளறி தட்டி கொட்டி சிறிது ஆரவைத்து தேவையான வடிவில் கட் செய்யவும். சுவையான அருமையான பீட்ரூட் கேசரி ரெடி.


ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்

காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். பீட்ரூட்க்கு  பதில் வேறு எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இது பார்க்க கலர்புல்லாக இருக்கும்எந்த கலரும் சேர்க்க தேவையில்லை. இதில் சர்க்கரைக்கு பதில் பால் கோவா + கண்டென்ஸ்ட் மில்க் மெயிட் சேர்த்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து பொடித்தும் போடலாம்.. குழந்தைகளுக்கு என்பதால் வாயில் தட்டாமல் போகும்.இதில் ரவை தனியாக வறுத்தும் சேர்க்கலாம். இதில் பீட்ரூட்டுடன் சேர்த்து வதக்கி சர்க்கரை + மில்க் மெயிட் சேர்ப்பதால் நல்ல ஒன்று சேர்த்து கேக் போல இருக்கும்.



Beetroot kesari cake, Red Coloured Recipe for kids
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, June 14, 2017

இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு ( சைவம் & அசைவம்) .




இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு ( சைவம் &அசைவம்)
.
வெஜிடேரியன் சமைப்பவர்கள் இதே முறையில் இறாலைமட்டும் தவிர்த்து காலிப்ளவர் முட்டையில் செய்து கொள்ளலாம். காய் அரைகிலோவும்,முட்டை 3 ம் சேர்த்து கொள்ளலாம்.
இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு கொஞ்சம் நிறை கூட்டோடு 4 பேருக்கு போதுமானதாக இருக்கும்.



  • பெரிய இறால்கால் கிலோ
  • முட்டைஇரண்டு
  • காலிப்ளவர் – கால் கிலோ
  • வெங்காயம் - இரண்டு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • தக்காளி - இரண்டு
  • பச்சை மிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது
 செய்முறை
  • இறாலை சுத்தம் செய்து நடுவில் மேலும், கீழும் உள்ள அழுக்கை எடுத்து கழுவி தனியாக வைக்கவும்.காலிப்ளவரை பூக்களாக பிரித்து கழுவி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை மிளகாய் ஒடித்து போட்டு தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும். இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
  • பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் மற்றும் காலிப்ப்ளவர் சேர்த்து  ஒரு கிளறு கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
  • முட்டையில் எலுமிச்சை சாறு பிழிந்து நல்ல அடித்து வெந்து கொண்டிருக்கும் இறாலின் மீது பரவலாக ஊற்றவும். ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து தோசை திருப்புவது போல் முட்டையோடு சேர்ந்து இறலை திருப்பி விட்டு மறுபடியும் மூடிபோட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
  • வெந்ததும் நல்ல ஒரு கிளறு கிளறி நன்கு கொத்தி விட்டு  கொத்தமல்லி தூவி இறக்கவும்.








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/